கடந்த 2009ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மதுரை தொகுதியில் அழகிரி வெற்றி பெற்றார். அவரது வெற்றி செல்லாது என அறிவிக்ககோரி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த பி.மோகன் என்பவர் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தும், பல்வேறு முறைகேடுகளில் இடுபட்டும் அழகிரி தேர்தலில் வெற்றி பெற்றார் என தனது மனுவில் கூறியிருந்தார்.. அதற்கிடையே உடல் நிலை பாதிக்கபட்ட மோகன் உயிரிழக்க,தேர்தல் முகவரும் தற்போதைய சட்டமன்ற உருப்பினருமான லாசர் வழக்கை தொடர்ந்தார். இந்நிலையில் வழக்கு நீதிபதி தனபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது .அப்போது மு.க.அழகிரி ஆஜராகி தன் மீது சுமத்தபட்ட குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து விளக்கமளித்தார்.